ரீ-20 உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசனின் சிறப்பான ஆட்டத்தால் எளிதான வெற்றியை பெற்று சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது பங்களாதேஷ் அணி.
பப்புவா நியூ கினியா அணியுடனான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெறமுடியும் என்ற இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்றது.
மஹமதுல்லா - 50, ஷாகிப் அல் ஹசன் - 46, லிட்டன் தாஸ் - 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தனர்.
இதையடுத்து 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூகினியா அணி பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
பப்புவா நியூ கினியா அணி சார்பில் டோரிகா ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் - 4, மொகமட் சைபுதீன் - 2, தஸ்கின் அஹமட் - 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
இதன் மூலம் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்றது பங்களாதேஷ் அணி.
Category: விளையாட்டு, புதிது
Tags: